Sunday, 12th May 2024
ebook தொடர்புக்கு : +91 - 9444983174
சென்னை: சென்னை பல்கலைக்கழக கல்லூரிகள் இடையேயான 54-வது ஏ.எல். முதலியார் பொன்விழா நினைவு தடகள போட்டி நேரு ஸ்டேடியத்தில் கடந்த 3 தினங்களாக நடந்தது. போட்டி முடிவில் பெண்கள் பிரிவில் எம்.ஓ.பி. வைஷ்ணவா கல்லூரி 14 தங்கம், 10 வெள்ளி, 6 வெண்கலம் ஆக மொத்தம் 30 பதக்கம் பெற்று சாம்பியன் பட்டம் பெற்றது. ஆண்கள் பிரிவில் லயோலா 12 தங்கம், 8 வெள்ளி, 9 வெண்கலம் பதக்கம் பெற்று முதல் இடத்தை பிடித்தது. சிறந்த வீராங்கனையாக சுமத்ரா (எத்திராஜ்), சிறந்த வீரராக அருண் குமார் (டி.ஜி. வைஷ்ணவா) தேர்ந்தெடுக்கப்பட்டனர். சென்னை பல்கலைக்கழக துணைவேந்தர் எஸ்.கவுரி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு பரிசுகளை வழங்கினார். சென்னை பல்கலைக்கழக உடற்கல்வி இயக்குனர் வி.மகாதேவன் உள்பட பலர் விழாவில் கலந்து கொண்டனர்.